பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பதறி ஓடிய பெற்றோர் (வீடியோ)

85பார்த்தது
தமிழ்நாட்டில் தொடர்ந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூடத்திற்கு இன்று (அக். 7) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே மாணவர்கள் பள்ளி அறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர், அழுதுகொண்டே பள்ளிக்கு பதறியடித்து ஓடினர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி