பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சீட் கொடுத்த பாஜக

563பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அணைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக 19 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் (தனி) தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.பால கணபதி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவிடம் பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி புகார் ஒன்றையும் தெரிவித்திருந்தார். தற்போது அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பாலியல் சீண்டல் குறித்த வீடியோ வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி