மக்களவைத் தேர்தலில் 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என மோடி நினைத்தார். ஆனால், அவர்களால் பெரும்பான்மையை நெருங்கக் கூட பெற முடியவில்லை. அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற பாஜகவினரின் கனவு பொய்யாகிவிட்டது. கடந்த முறை எந்த விவாதமும் நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றினார்கள். ஆனால், இந்த முறை அப்படி செய்ய முடியாது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.