காரில் இடித்த பைக்.. பறந்து விழுந்த இளைஞர்கள் (வீடியோ)

10759பார்த்தது
ஆந்திர பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி - தாடேபள்ளிகுடம் மண்டலம் பெண்டபாடு என்ற இடத்தில் நேற்று (ஜூன் 19) கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் அதிவேகமாக சென்ற ஆட்டோவை பைக் ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவர்களது பின்னால் வந்த மற்றொரு பைக்கும் விபத்துக்குள்ளானது. இதில், மொத்தம் நான்கு இளைஞர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், கிஷோர் (20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி