பெங்களூரு கட்டட விபத்து - 2 தமிழர் குடும்பத்துக்கு நிதி

57பார்த்தது
பெங்களூரு கட்டட விபத்து -  2 தமிழர் குடும்பத்துக்கு நிதி
பெங்களூரு பாபுசாபாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அதில், பணி செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் ஆகிய 2 தமிழகர்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த தமிழகர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி