குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு

65பார்த்தது
குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு
குமுளி மலைச்சாலையில் அரசுப் பேருந்து தடுப்புச் சுவரில் மோதி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குமுளியில் இருந்து இன்று(மே 12) பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் சூழல் தவிர்க்கப்பட்டு, சிறிய அளவிலான விபத்தாக முடிந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி