வீட்டில் மின் இணைப்பை துண்டிக்க வந்த கேரள மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டனர். எர்ணாகுளம் திரிபுனித்துராவில் ஜெய்னி என்பவர், மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். இதனால் மின் இணைப்பை துண்டிக்க வந்த ஊழியர்களை அவர், பிளாஸ்டிக் பைப் கொண்டு தாக்கினார். லைன்மேன் குட்டனும், ரோஹித்தும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஜெய்னியை போலீசார் கைது செய்தனர்.