இலவச அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

1565பார்த்தது
இலவச அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் அழகு கலை பயிற்சி இலவசமாக வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது 30 நாட்கள் நடைபெறும் பயிற் சிமுடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் விண்ணப்பிக்கவும். மே-4-ஆம் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை பெரம்பலூர் – 621212 என்றமுகவரியிலோ
அல்லது 04328-277896, என்றஎண்ணிலோ, அல்லது 919488840328 செல் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம். பயிற்சி மைய அலுவலர் ஆனந்தி வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி