2 மாட்டுகொட்டகை, 13 வைக்கோல் போருக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

5834பார்த்தது
பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், சிறுவாச்சூர் ஆகிய கிராமங்களில் 2 மாட்டு கொட்டகை, 13 வைக்கோல் போர் ஆகியவற்றை மர்ம நபர்கள் தொடர்ச்சியாக தீ வைப்பு போலீசார் விசாரணை.

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம், செல்லியம்பாளையம், சிறுவாச்சூர், விளாமுத்தூர்ஆகிய சுற்று கிராமங்களில் மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் இளங்கோவன், பொன்னுசாமி
ஆகியோரது வயல் காட்டில் கட்டி வைத்திருந்த மாடுகளை, அவிழ்த்துவிட்டு 2 மாட்டு கொட்டகைக்கும்
மற்றும் ராமர், அண்ணாமலை, பெரியசாமி ராஜேந்திரன். பொன்னுசாமி, ஜெயவேல் ரவிச்சந்திரன்
மாமுண்டி, சுப்பிரமணி, அண்ணாதுரை ஆகியோரது 13 வைக்கோல் போர்க்கும் மர்ம நபர்கள் தீவைத்து எரித்து உள்ளனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் சென்று கொளுத்து விட்டு எரிந்து கொண்டிருந் தீயை தண்ணீர் பீச்சி அணைத்தனர். இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் நேரில் பார்வையிட்டு, விசரணை மேற்கொண்டு மார்ச் 26ம் தேதி மாலை 4 மணி அளவில் வழக்குப் பதிவு செய்து தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி