உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

2629பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவகுடி கிராமம் வடக்கு காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கிருஷ்ணன் வயது 58,. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஏப்ரல் - 19ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் கீழே விழுந்துள்ளார். இவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர் அவருக்கு, மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்ததில் இவர் மூளை சாவு அடைந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரது மனைவி தனலட்சுமி வயது 52, என்பவர் கணவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்யும் நபர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திட வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி காலை விசுவகுடியில் கிருஷ்ணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் கோகுல் கலந்துகொண்டு கிருஷ்ணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். மேலும் கிருஷ்ணனுக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி