'ஆப்பிள்' நிறுவனத்தில் மூன்றாண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்

61பார்த்தது
'ஆப்பிள்' நிறுவனத்தில் மூன்றாண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. 4-5 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி திறன் ரூ.3.32 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் தற்போது 1.5 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த விரும்புகிறது. விரைவில் மிகப்பெரிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி