நாம் பயன்படுத்தி வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு Jio, Airtel உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டணங்களை சுமார் 25% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக Axis Capital நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அதிகமான முதலீடுகள் தேவைப்படுவதால் அவர்களின் லாபம் குறைகிறதாக கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.