பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் பேராயர் மோரன் மோர் அத்தனேஷியஸ் யோஹன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அவரின் மறைவு செய்தி கேட்டு வருந்தினேன். சமயப்பணியுடன் சேர்த்துப் பல கல்வி, மருத்துவ நிறுவனங்களையும் தொடங்கி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவு கிறித்தவ சமயப் பற்றாளர்களுக்கு மிகப் பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.