"அதிமுகவை அசைத்து பார்க்கிறார் அண்ணாமலை" - ஆர்.பி.உதயகுமார்

84பார்த்தது
"அதிமுகவை அசைத்து பார்க்கிறார் அண்ணாமலை" - ஆர்.பி.உதயகுமார்
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் மோடியின் அருகில் இபிஎஸ்-ஐ அமர வைத்துவிட்டு, தமிழகத்தில் அதிமுகவின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் தொடர்ந்து ஈடுபட்டீர்களா இல்லையா? மனசாட்சியை தொட்டு அண்ணாமலை சொல்ல வேண்டும். இபிஎஸ்-ஐ தொடர்ந்து அவதூறாக பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி