அட்சய திருதியை - நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும்!

85பார்த்தது
அட்சய திருதியை - நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும்!
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 4.56 மணிக்கு முடியும். இதையொட்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20,000 கிலோ தங்கம் விற்பனையானது.

கடந்த ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.45,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.53,000-ஐ கடந்து விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி