அதிமுக பிரமுகர் கொலை வழக்கு - 3 பேர் கைது

53பார்த்தது
அதிமுக பிரமுகர் கொலை வழக்கு - 3 பேர் கைது
கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் நேற்று (ஜூன் 29) நள்ளிரவு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புஷ்பநாதனை கொலை செய்த மூன்று பேரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்தி விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், ஆடுகளை திருடி புஷ்பநாதனிடம் விற்று வந்ததாகவும், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டதால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி