அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை

82பார்த்தது
அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டிைய அடுத்த தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (64). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று (ஜுலை 3) இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டுக்கு சில அடி தூரத்தில் வந்த போது அவரை நோட்டமிட்டபடி 2 டூவீலர்களில் சிலர் கும்பலாக எதிரில் வந்து வழிமறித்து அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அந்த பகுதியில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதைபார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். மாநகர துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் மற்றும் அன்னதானப்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி