அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

71பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி
கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் மூலம் மிரட்டி வாங்கிய வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 12 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி