மது அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

565பார்த்தது
மது அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி கொளுத்தியது. வெயிலின் வீரியத்தை கருத்தில் கொண்டு மது அருந்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் பழங்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி