இந்திய ஒற்றுமை நீதி நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று இளைஞர்கள் மத்தியில் பேசும்போது, இன்று நமது நாட்டில் திணிக்கப்படும் செல்போன் போதையில் யாரும் சிக்காதீர்கள். இந்திய இளைஞர்கள் நாள்தோறும் 8 முதல் 10 மணி நேரம் செல்போனில் மூழ்கியுள்ளார்கள். அம்பானியும் அதானியும் கோடி கோடியாய் சம்பாதிப்பதற்காக இந்த போதை வலுக்கட்டாயமாக இந்திய இளைஞர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று எச்சரித்தார்.