ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்

81பார்த்தது
ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்
அரசு நிறுவனமான ஆவின், மக்களுக்குத் தேவையான பால், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஐஸ்கிரீம் வகைகளின் விலைகளை அதிரடியாக உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.3 முதல் ரூ.70 வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் விலை ஏற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆவின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி