கேரளாவை சேர்ந்த நிகிதா என்ற இளம்பெண் கடந்த சனிக்கிழமை இறால் சாப்பிட்ட நிலையில் அவருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகிதா இன்று உயிரிழந்தார். அவரின் உள்ளுறுப்புகள் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை ஏற்காத குடும்பத்தார் நிகிதாவின் மரணத்திற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பின் மர்மம் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.