2001- 2006 அதிமுக ஆட்சியில் சிறிது காலம் முதல்வராகவும், வருவாய் அமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பி.எஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதியப்பட்ட நிலையில் போதுமான ஆதாரம் இல்லை என அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 22-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.