குழந்தை இல்லை என மனைவியை கொன்ற கணவன்

1049பார்த்தது
குழந்தை இல்லை என மனைவியை கொன்ற கணவன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்தவர் கேசவன்(32). இவருக்கும் மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. எனவே தினமும் குடித்துவிட்டு மகாலட்சுமியை கேசவன் அடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடித்துவிட்டுத்தகராறில் ஈடுபட்ட அவர், அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் மகாலட்சுமி அலறியடித்து மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கேசவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி