ரயிலுக்கு இடையில் சிக்கி விரல்களை இழந்த இளைஞர்.. (வீடியோ)

76பார்த்தது
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் புதன்கிழமை வேலையில்லாத் திண்டாட்டத்தால், இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜான்சி-எட்டாவா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, இதனை கவனித்த லோகோ பைலட் அவசரகால பிரேக் போட்டு ரயிலை நிறுத்தி அவரது உயிரைக் காப்பாற்றினார். ஆனால், ரயில் என்ஜின் இடையே சிக்கிக் கொண்ட இளைஞர் படுகாயம் அடைந்தார். இதனால், அவரது இரண்டு கால்விரல்களும் துண்டிக்கப்பட்டன. ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி