கார் மீது மோதிய பள்ளி பேருந்து.. உயிர் தப்பிய பெண்கள்

85பார்த்தது
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் நேற்று (ஜூலை 4) டெல்லி பப்ளிக் பள்ளி மாணவர்களுடன் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து முன்னாள் சென்ற பைக் மற்றும் காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் ஒன்று லாரியின் மீது மோதி நொறுங்கியது. காரில் இருந்த இரண்டு பெண்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த விசாரணையில் பள்ளி பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி