ஐஸ்கிரீமில் கண்ணடித்துண்டு.. பெண் நாக்கு அறுப்பு?

50பார்த்தது
ஐஸ்கிரீமில் கண்ணடித்துண்டு.. பெண் நாக்கு அறுப்பு?
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி கவுசல்யா (31), நேற்றிரவு பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள (காப்பர் கிச்சன்) என்ற உணவகத்திற்கு சென்று உணவு அருந்திவிட்டு, ஃபலூடா வகை ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது கவுசல்யா நாக்கில் கண்ணாடி துண்டு போன்ற ஒன்று அறுத்து ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்த விசாரணையில் உணவாக மேலாளர் கூறுகையில் அது கண்ணாடி துண்டு இல்லை கூர்மையான ஐஸ்கட்டி. அவர்கள் பணம் பறிக்கவே இவ்வாறு கண்ணடித்துண்டு என பொய் கூறுகின்றனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி