உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்டுள்ளார். இவரது தம்பியும், மனைவியும் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததால், அதை தாங்க முடியாமல் அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.