மக
்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள
தலைவர்கள் படங்கள் அகற்றப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சி பேனர்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.