திருமணம் செய்ய மறுத்த மாணவி கழுத்தை அறுத்து கொலை

72பார்த்தது
திருமணம் செய்ய மறுத்த மாணவி கழுத்தை அறுத்து கொலை
கர்நாடக மாநிலம் மடிகேரியில் மீனா என்ற பதினைந்து வயது சிறுமி கொல்லப்பட்டார். மீனாவின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த கொலை நடந்துள்ளது. வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்ற பின், பெற்றோர் கண்முன்னே கொலை நடந்துள்ளது. 32 வயதுடைய இளைஞருக்கு சிறுமியின் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிலர் குழந்தை திருமணத்திற்கு எதிராக குழந்தை உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்து சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

18 வயது முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என பெற்றோரை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கும் முடிவை கைவிட்டனர். இதையறிந்த இளைஞர் வீட்டுக்குள் புகுந்து சிறுமி இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

தொடர்புடைய செய்தி