தூக்கிட்ட நிலையில் 9 வயது சிறுமி - போலீஸ் விசாரணை

13849பார்த்தது
தூக்கிட்ட நிலையில் 9 வயது சிறுமி - போலீஸ் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஹன்சிகா (9) என்ற சிறுமி நேற்று(மே 11) மதியம், கட்டில் மீது பிளாஸ்டிக் நாற்காலியை போட்டு அதன் மீது ஏறி மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டார். இதனைப் பார்த்த அவரது 4 வயது தங்கை கூச்சலிட்டார். உடனே ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விளையாடியபோது சிறுமிக்கு இவ்வாறு நேர்ந்ததா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி