ஆமைக்கறி சாப்பிட்ட 9 பேர் பலி!

569பார்த்தது
ஆமைக்கறி சாப்பிட்ட 9 பேர் பலி!
தான்சானியா நாட்டில் ஆமைக்கறியை சமைத்து சாப்பிட்ட 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சான்சிபார் பகுதியைச் சேர்ந்த சிலர் கடல் ஆமையை பிடித்துவந்து சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அதில் 9 பேர் சிறிது நேரத்திலேயே இறந்த நிலையில், 78 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சான்சிபார் அதிகாரிகள், ஹம்சா ஹசன் ஜூமா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, கடல் ஆமைகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி