ஏழு கோடி நிதி - எம்.பி‌, பாராட்டு

1053பார்த்தது
ஏழு கோடி நிதி - எம்.பி‌, பாராட்டு
மதுரை எம்.பி., சு வெங்கடேசன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், முதல் நாள் சுமார் ஏழு கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித்துறைக்கு கொடையாக அளித்துவிட்டு மறுநாள் வங்கியில் கிளார்க் வேலையை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கும் ஆயி பூரணம் அம்மாளின் கரங்களைப் பற்றி வணங்கினேன் என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மதுரையில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவர் இந்த நிதியை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி