பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ரூ.50000

13993பார்த்தது
பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ரூ.50000
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும். குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்பக்கட்டுப்பாடு செய்த சான்று ஆகியவற்றை இணைத்து, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி