பெண்களுக்கு கோழி வளர்க்க 50 சதவீத மானியம்

75பார்த்தது
பெண்களுக்கு கோழி வளர்க்க 50 சதவீத மானியம்
ராமநாதபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ஏழை பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 கோழி குஞ்சுகள் வழங்க உள்ளனர். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிந்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்ய தகுதியுள்ள பெண்கள் அந்தந்த தாலுகா பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி இயக்குநரிடம் அணுகி விண்ணப்பத்தினை வழங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி