4 வயது சிறுமி மரணம்; தலைமை ஆசிரியர் மீது வழக்கு

81414பார்த்தது
4 வயது சிறுமி மரணம்; தலைமை ஆசிரியர் மீது வழக்கு
பெங்களூருவில் பள்ளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தாமஸ் செரியன் மற்றும் மற்றொரு ஊழியர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதில், பள்ளி ஆயாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திங்கள்கிழமை மதியம் ஜியானா என்ற சிறுமி வாந்தி எடுப்பதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில, பள்ளிக்கு வந்த பெற்றோர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காயம் எப்படி ஏற்பட்டது என்பதை பள்ளி நிர்வாகம் மறைத்தது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​மாடியில் இருந்து தவறி விழுந்ததில் குழந்தையின் தலை உடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி