நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த மேலும் 4 அமைச்சர்கள்

583பார்த்தது
நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த மேலும் 4 அமைச்சர்கள்
நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த மேலும் 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை கொட்டித் தீர்க்கிறது. வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், 4 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னாசு, கீதா ஜீவன், மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் 4 அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி