நாடாளுமன்றத்தில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

28738பார்த்தது
நாடாளுமன்றத்தில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
மக்களவையில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம் மக்களவையில் கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் டெரிக் ஓ பிரையனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி