பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர்

1080பார்த்தது
பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர்
இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இன்று கோவையிலிருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும் பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளார் முதலமைச்சர்.

தொடர்புடைய செய்தி