தஞ்சாவூர்: பாபநாசம் அருகே உத்தாணி குடமுற்று ஆற்றுப்பாலம் அருகில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரயிலில், 40 வயது மதிக்கத்தக்க தாய் தன்னுடைய, 10 மற்றும் 9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்சி ரயில்வே டிஎஸ்பி மகாதேவன், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், தனலட்சுமி ஆகியோர்கள் வந்து வழக்குப்பதிவு செய்தனர். சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.