வெப்ப அலை.. உயிரிழப்பு 87ஆக உயர்வு!

57பார்த்தது
வெப்ப அலை.. உயிரிழப்பு 87ஆக உயர்வு!
டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஒடிஸாவில் 19 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16 பேரும், பீகாரில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், பஞ்சாபில் ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி