மநீம கட்சியில் இணைந்த 200 மீனவர்கள்!

558பார்த்தது
மநீம கட்சியில் இணைந்த 200 மீனவர்கள்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் 200 மீனவர்கள் அக்கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட மீனவர்கள் 200 பேர் பிரதீப் குமார் தலைமையில் கட்சியில் இணைந்தனர். மேலும், வடசென்னை மாவட்ட பாஜக மாவட்ட மீனவரணி செயலாளர் லோகேஷ் தலைமையில் அக்கட்சித்தொண்டர்களும் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த மநீம தலைவர் கமல்ஹாசன் மீனவர்களின் நலன்களுக்காக எங்கள் குரல் இன்றுபோல் என்றும் ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :