பீகார் மாநிலத்தில் சிவன் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இரண்டு பாலங்களும் எம்.பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டிருந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 பாலங்கள் இடிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பீகாரில்
பாஜக கூட்டணியில் ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மீது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.