ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு - அதானி குழுமம் அறிவிப்பு

67பார்த்தது
ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு - அதானி குழுமம் அறிவிப்பு
அதானி குழுமம் 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சுமார் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை விரிவுபடுத்துவதோடு, சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திறனையும் அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எரிசக்தி திறனை அதிகரிக்க சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.70 ஆயிரம் கோடி மற்ற விஷயங்களில் முதலீடு செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி