கர்நாடகா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 1,300 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது. டெல்டா பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் மற்றும் கரும்பு, வாழை, வெற்றிலை, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கான உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.