சாலை விபத்தில் 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது மாலிக்.
இவர் தனது குடும்பத்தினருடன் குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலையோரம் இருந்த பனை மோதியதில் காரில் பயணம் செய்த பரிதாபீவி (58), அப்ரின் பாத்திமா (3), சீனி பர்கான் 8 மாத குழந்தை உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் படுகாயமடைந்த முகமது மாலிக், அவரது மனைவி அகமது நிஷா, மகள் அஸ்ரின் பாத்திமா (4) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி