இருதய ஆண்டவர் ஆலயத்தில் தேர் பவனி

57பார்த்தது
இருதய ஆண்டவர் ஆலயத்தில் தேர் பவனி
மதுரை ரயில்வே காலனியில் உள்ள பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு தேர் பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகளில் பவனி சென்ற தேர் பவனி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். தேர் பவனி விழாவை சுற்றுவட்டார மக்களும் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :