மொட்டையடித்து, சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்.. (வீடியோ)

மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் காவல் நிலைய பகுதியில் கடந்த மே 22ஆம் தேதி அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. மகேந்திர சிங் என்ற நபர் அவரது உறவினர்களால் கடத்தப்பட்டார். அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்து மொட்டையடித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அநீதி இழைத்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த வெறிச் செயலை ஈவு இரக்கமின்றி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி