மயோனைஸ் சாப்பிட்ட பெண் பலி.. 178-க்கு சிகிச்சை

79பார்த்தது
மயோனைஸ் சாப்பிட்ட பெண் பலி.. 178-க்கு சிகிச்சை
கேரளா மாநிலம் திருச்சூரில் உணவகம் ஒன்றில் சுமார் 178 பேர் கடந்த 25 ஆம் தேதி குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டுள்ளனர். அதற்கு வழங்கப்பட்ட மயோனைஸ் உடன் உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். இதை அடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குடிலக்கடவைச் சேர்ந்த உசைபா (வயது 56) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்ட அவர் இன்று (மே 28) உயிரிழந்துள்ளார். மயோனைஸ் தான் உணவில் விஷம் பரவ கரணம் என தெரியவந்துள்ளது.