"தரமான சைக்கிள்கள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு தரமான சைக்கிள்கள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை தர வேண்டும் என்றும், அதற்கு சட்டப்படி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி